கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்ப்பதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருமுல்லைவாயில் அருகே நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் நிவாரண பொருட்களை அரசின் மூலமாக தான் கொடுக்க வேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை, யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என தெரிவித்தார்.

நிவாரண பொருட்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version