நாட்டின் பாதுகாப்பு மீது மத்திய அரசு மிகுந்த அக்கரை காட்டுகிறது

வளர்ச்சி பணிகளில் அக்கரை காட்டும் மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கரை காட்டுவதாக முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் 40,000 கோடி மதிப்பிலான சாலை, ரயில் திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று முதலமைச்சர் உரையாற்றினார். கன்னியாகுமரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்த அவர், வளர்ச்சி பணிகளில் அக்கரை காட்டும் மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கரை காட்டுவதாக கூறினார். தமிழ்நாட்டை சேர்ந்த விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தானிடமிருந்து பத்திரமாக மீட்டதற்கு மத்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Exit mobile version