உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளது மத்திய அரசு – காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ

ரபேல் போர் விமானம் வாங்கியதில் நாட்டிற்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஆகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சாக்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு கமிட்டி விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதாக குற்றம்சாட்டிய அவர், உரிய விசாரணை வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றார். மத்திய அரசு தவறான தகவல்களை சமர்பித்து உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாக சாக்கோ தெரிவித்தார்.

 

Exit mobile version