ரஃபேல் போர் விமான விவகாரம் – மத்திய அரசு அறிக்கை

ரஃபேல் போர் விமான விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

ரஃபேல் போர் விமானம் குறித்த ஒப்பந்த நடைமுறை, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து, மூன்று சீலிடப்பட்ட உறையில் இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்.எல். ஷர்மா தொடர்ந்த வழக்கில் ஒப்பந்த நடைமுறை உள்ளிட்டவை குறித்து இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக, காங்கிரஸ், மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version