தமிழக அரசை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது

மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக சட்ட பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற தொழில் வர்த்தக கண்காட்சியை அவர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணையை கட்டுவதன் மூலம் காவிரி ஆற்றில் தமிழகத்தின் உரிமையை பறிக்க கர்நாடகம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமான செயல் என்றும், இந்த
விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக நடந்து கொள்வதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்தார்.

Exit mobile version