கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்

கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள விசாரணை கைதிகள் பிளாக்கில் இருந்து 7 செல்போன்களை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை மத்திய சிறையில் சிறைக் காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் கைதிகளிடமிருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையில் சிக்கிய செல்போன்களை வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சிறையில் இருந்தபடி, செல்போன்கள் மூலம் கைதிகள் யாரை தொடர்பு கொண்டு பேசினர் என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version