திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மையம் துவக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் மற்றும் ரத்த சுத்திகரிப்பு பிரிவு சேவையை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார். திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சிடி ஸ்கேன் மையம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு அமைக்கப்ப்டடுள்ளது.

இந்த சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொண்டுவந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாந்தகுமாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version