சி.சி.டி.வி மூன்றாம் கண் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது – ஏ.கே. விஸ்வநாதன்

சிசிடிவி மூன்றாம் கண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகளுக்கு பாலின உணர்திறன் மற்றும் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி, காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், சிசிடிவி மூன்றாம் கண் திட்டம் சிறப்பாக செயல்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சிங்கப்பூரை போல சென்னையிலும் பெண்களுக்கு பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக் கொண்டார். மேலும் குடும்ப பிரச்சனைகளை உளவியல் ரீதியாக ஆராய்ந்து குடும்பத்தை சேர்த்து வைக்க உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Exit mobile version