சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி பொருத்தப்படும்: மாநகர காவல்துறை ஆணையர்

சென்னையில் மூன்று மாதத்தில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமிரா பொருத்தப்படும் என காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை வளசரவாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 270 சிசிடிவி கேமிராக்களை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019 ஆண்டிற்குள் 5 லட்சம் கேமிராக்கள் சென்னையில் பொருத்தப்படும் என கூறினார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிசிடிவி காட்சிகள் பங்கு வகிப்பதாகவும் கூறிய விஸ்வநாதன்,
உண்மையான குற்றவாளிகளை கண்டறியவும், வழக்கிற்கு தடயமாகவும் சிசிடிவி உதவியாக உள்ளதாக குறிப்பிட்டார். சட்ட ஒழுங்கை நிர்வகிப்பதில் தமிழகம் முதன்மையாக உள்ளதாகவும் விஸ்வநாதன் கூறினார்.

Exit mobile version