திருப்பதியில் கோவில் கிரீடங்களை திருடிய நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு

திருப்பதி கோவிந்தராஜர் சுவாமி கோயில் 3 கிரீடங்களை திருடிய நபரின் சிசிடிவி காட்சி பதிவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜர் சுவாமி கோயிலில் ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள 3 தங்க கிரீடங்கள் கடந்த 2 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குற்றத் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்க கிரீடங்கள் கொள்ளையடித்தபோது, கோயில் வளாகத்தில் நடமாடியவரின் சிசிடிவி காட்சி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. கிரீடங்களை கொள்ளையடித்து சென்ற நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு தேவஸ்தானம் சார்பில் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

Exit mobile version