குற்றச் சம்பவங்களை தடுக்கும்வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி சரவணன் தொடங்கி வைத்தார்.

குற்றச் சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புவனகிரியில் 40 மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகள் நிறைவுபெற்றதையடுத்து, கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதர்கள் அனைத்து
விஷயங்களிலும் சகிப்புத்தன்மை,பொதுநலனுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version