பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை!

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக, தலைமைக் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், சி.பி.ஐ. தனித்தனியே 2 வழக்குகளாக பதிவு செய்துள்ளதுடன், நாளை விசாரணை தொடங்கவுள்ளது. இந்தநிலையில், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். வழக்கில் சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதியிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Exit mobile version