காவிரி கரையோர பகுதிகளில் வசிப்பவர்களா நீங்கள்?…

கர்நாடகாவில் பெய்து வரும் கனத்த மழையால், காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், இந்தாண்டில் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. நேற்று இரவு நீர் வரத்து அதிகரிப்பால், மேட்டூரிலிருந்து, 1 லட்சத்து 70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின், 16 கண் மதகு கரையோரமுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் அறிவுறுப்பட்டுள்ளது. அதிக நீர்வரத்தால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வினாடிக்கு சுமார் 1 லட்சத்து 75  ஆயிரம்  கன அடி நீர் வரத்து உள்ளது. இதனிடையே  38வது நாளாக, ஆற்றில் குளிக்கவும், ஏழாவது நாளாக, பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்துள்ளது.

Exit mobile version