News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சாதியும் , திமுக அரசியலும் சேர்ந்து பெண்ணைத் தாக்கி அரை நிர்வாணத்துடன் ஓட வைத்த அவலம்!

Web Team by Web Team
September 19, 2021
in TopNews, க்ரைம், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சாதியும் , திமுக அரசியலும் சேர்ந்து பெண்ணைத் தாக்கி அரை நிர்வாணத்துடன் ஓட வைத்த அவலம்!
Share on FacebookShare on Twitter

பெரியாரின் 143வது பிறந்தநாள் கொண்டாடும் இந்த வேளையிலும் வாணியம்பாடி அருகே சாதியும் அரசியலும் , திமுக அரசியலும் சேர்ந்து பெண்ணைத் தாக்கி அரை நிர்வாணத்துடன் ஓட வைத்த அவலத்தை காவல்துறையும் கண்டு கொள்ளாத சோகம் அரங்கேறியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் பங்கூர் தாதகவுண்டனூரில் வசித்து வருபவர் சித்ரா. இவரது பெற்றோர் கிருஷ்ணன் – சுசிலா ஆகியோர் கலப்பு திருமணம் செய்தவர்கள். இந்த காரணத்தால் இவர்களின் குடும்பத்தினரை, தீண்டாமை எனும் தீ இன்றும் சுட்டெரித்து வருகிறது.

தந்தை கிருஷ்ணனின் உறவினர்களான திமுக முன்னாள் கவுன்சிலர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 10 பேர், சித்ராவின் குடும்பத்தினரை அடிக்கடி சாதியின் பெயரை சொல்லி திட்டுவதுடன், மிரட்டல் விடுப்பதாவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் சித்ராவின் வீட்டிற்கு சென்ற திமுக பிரமுகர் சரவணனின் உறவினர்கள் கத்தி, கடப்பாரை கொண்டு கொலை செய்ய முயன்றதாக,வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் ஆலங்காயம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார்.

போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்தவர்கள், கடந்த 8ஆம் தேதி, சித்ராவை சரமாரியாக தாக்கி அரைநிர்வாணமாக ஓட விட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது. இதனை செல்போனில் படம் பிடித்ததால், அவரது தங்கையும் தாக்கப்பட்டார். அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியும் பறிக்கப்பட்டது.

படுகாயமைடைந்த சித்ராவுக்கு மருத்துவமனையிலும் சாதி பாகுபாடு காட்டி தரையில் படுக்க வைத்ததாகவம், சாதிரீதியான பிரச்னையை நிலப்பிரச்சினையாக திசை திருப்ப முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவிடம் சித்ரா மனு அளித்துள்ளார். மனு மீது வாணியம்பாடி டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக சித்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

55ஆண்டுகளாக சாதி பாகுபாட்டால் இன்னல்களுக்கு ஆளாகி வரும் சித்ராவுக்கு, தற்போதாவது விமோசனம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: caste issuedmkfailsintercaste marriagenewsjTNPolice
Previous Post

என் மேலேயே சந்தேகமா? கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

Next Post

கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

Related Posts

திமுகவின் தூண்டுதலின் பேரில் அதிமுக வட்ட செயலாளர் வாடகைக்கு இருந்த கடை இடிப்பு!
தமிழ்நாடு

திமுகவின் தூண்டுதலின் பேரில் அதிமுக வட்ட செயலாளர் வாடகைக்கு இருந்த கடை இடிப்பு!

February 5, 2023
காதல் திருமணம் செய்த பெண்…கடத்தலில் திருப்பம்…ஆடியோ வெளியீடு!
தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த பெண்…கடத்தலில் திருப்பம்…ஆடியோ வெளியீடு!

February 5, 2023
துணிவு திரைப்பட பாணியில் திருட்டு!
தமிழ்நாடு

துணிவு திரைப்பட பாணியில் திருட்டு!

February 5, 2023
கனமழையால் புதுக்கோட்டையில் பயிர்கள் சேதம்!
தமிழ்நாடு

கனமழையால் புதுக்கோட்டையில் பயிர்கள் சேதம்!

February 5, 2023
பட்டியலின இளைஞரை ஆபாச வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி!
தமிழ்நாடு

பட்டியலின இளைஞரை ஆபாச வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி!

January 30, 2023
கணவனின் கண்முன் மனைவியை கடத்திய கும்பல்!
தமிழ்நாடு

கணவனின் கண்முன் மனைவியை கடத்திய கும்பல்!

January 27, 2023
Next Post
கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

Discussion about this post

அண்மை செய்திகள்

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

February 7, 2023
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

February 7, 2023
களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

February 7, 2023
வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

February 7, 2023
ஆஸி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஓய்வு!

ஆஸி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஓய்வு!

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version