கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கலிபோர்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்து 200ஐ தாண்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் என பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும், பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்து 200ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ள நிலையில், 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹாங்காங்கில் நாய் ஒன்றுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version