தம்பி தற்கொலை செய்ததையடுத்து அண்ணனும் தற்கொலை

சென்னை திருவொற்றியூர் காசிமேடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு காசிமாநகர் 2-வது தெருவை சேர்ந்த அலெக்சாண்டர், ஜோஸ்வின் மேரி ஆகியோரின் இளைய மகன் ஆரோக்கியதாஸ் தனது நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில், எங்களது குடும்பத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் வீட்டில் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதனையடுத்து, தம்பியின் உடலை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்து விட்டு, வீட்டிற்கு வந்த அண்ணன் தம்பி தூக்கிட்ட அதே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version