கடலூரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 50சவரன் நகை கொள்ளை !

கடலூரில் மீனவரின் வீட்டில் 50 சவரன் நகை, 20ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சுனாமி நகரை சேர்ந்த மீனவர் செல்வகுமார் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், அவரது மனைவி வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 50 சவரன் நகை,20ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவறை திருடி சென்றுள்ளனர். விடியா அரசின் காவல்துறையினர் முறையாக ரோந்து பணிகளை மேற்கொள்ளாததே இது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version