கோயிலின் பூட்டை உடைத்து பிள்ளையார் உற்சவர் சிலை திருட்டு

மதுராந்தகம் அருகே அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் பல லட்சம் மதிப்புள்ள பிள்ளையார் உற்சவர் சிலை திருடப்படடுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள பழமையான உற்சவர் சிலை திருடப்பட்டுள்ளது. கோயிலின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புடைய சிலையை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். கோயிலின் முன் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவை வைத்து மதுராந்தகம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version