போதுமான ஆதாரம் இல்லாததால் கால்பந்து வீரர் நெய்மர் குற்றமற்றவர்: பிரேசில் போலீஸ்

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் குற்றமற்றவர் என அந்நாட்டு மகளிர் காவல் துறை அதிகாரி ஜூலியானா லோபஸ் புசாக்கோஸ் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் 6-வது மகளிர் பாதுகாப்பு காவல் நிலைய பிரதிநிதி ஜூலியானா லோபஸ் புசாக்கோஸ், செவ்வாயன்று சாவ் பாலோவில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் குற்றமற்றவர் எனவும், அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பகுப்பாய்வுகள் போதுமானதாக இல்லை எனவும், மாடல் அழகி டிரிண்டேட் மெண்டிஸ் டி சாஸோ கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கவில்லை என தெரிவித்தார்.

காவல் துறையினர் விசாரணையில், கேட்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் அவர் குற்றமட்டவர் என நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நெய்மரையும், அவரது தந்தை நெய்மர் டா சில்வா சாண்டோஸும் நஜிலாவை மிரட்டி, பணம் பறித்தல் குற்றத்திற்காக கண்டனம் தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.

Exit mobile version