மதுரையில் தனியார் உணவகத்தை முற்றுகையிட்ட பிராமண சங்கத்தினர்

மதுரையில் பிராமண சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் “கும்பகோணம் ஐயர் சிக்கன்” கிடைக்கும் என விளம்பரம் செய்த தனியார் உணவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரை வடக்குமாசி வீதி சந்திப்பில் இயங்கி வரும் பிரபல அசைவ உணவகம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வெவ்வேறு வாசகங்களுடன் விளம்பரம் செய்திருந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட வகையான உனவுக்கு “கும்பகோணம் ஐயர் சிக்கன்” எனப் பெயரிட்டு விளம்பரப்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து பிராமண சங்க நிர்வாகிகள் குறிப்பிட்ட உணவகத்தை முற்றுகையிட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு வருகை தந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Exit mobile version