ஒடிசா நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

ஒடிசாவில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பன்ஞ் பகுதியில் பீமா குண்ட் சுற்றுலா தலம் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். இங்குள்ள நீர்வீழ்ச்சியை காண்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் இருந்து செல்பி எடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் செல்பி மோகம் ஆக்கிரமித்துள்ள நிலையில், இங்கு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஆற்றில் அதிக வெள்ளம் காணப்பட்டதால், அவருடைய நண்பர்கள் மற்றும் சக பயணிகள் அவரை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தார். கரையொதுங்கிய அவரது சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Exit mobile version