பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும், குறிப்பாக தமிழில் வசீகரா, ஒன்றா ரெண்டா ஆசைகள், யாரோ மனதிலே உள்ளிட்ட பல பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரிக்கு சென்றபோது, உடல்நலக்குறைவால் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதால், 2 நாட்கள் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version