மதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

மதுரை – போடி இடையே ரயில் பாதை பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று காலை நாட்டு வெடி குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை பழங்காநத்தத்தில் மகாலட்சுமி நகர் அருகே ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை தண்டவாளதில் அருகே பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிகுண்டு வெடித்த சத்தத்தை கேட்டவுடன் பெண்மணி ஒருவர், காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, காவல் துறையினரும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 500 மீட்டர் தூர அளவிற்கு கற்கள் வீசப்பட்டதாக பெண்மணி ஒருவர் கூறினார்.

நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தில் தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள, குடியிருப்பு வளாகத்தில் காலைப் பொழுதில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version