தீவிரவாத முகாம்கள் தகர்ப்பு : முதலமைச்சர் பாராட்டு

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தகர்த்த இந்திய விமானப்படை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து, அதனை வேரோடு அழிப்பதற்கு எடுத்திடும் நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி பல வெற்றிகள் கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக இன்றைய தினம் இந்திய விமானப்படை வெற்றிகரமான தாக்குதல் நடத்தியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கர வாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழ் நாட்டு மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Exit mobile version