கருப்பர் கூட்டம் சுரேந்திரன் சரண்டர்!!

கந்தசஷ்டி கவச விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து,கந்தசஷ்டி கவச விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்ய தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.

Exit mobile version