பா.ஜ.க மூத்த தலைவர் கைதுக்கு கண்டனம் – கேரளா முழுவதும் பா.ஜ.கவினர் போராட்டம்

சபரிமலைக்கு செல்ல முயன்ற பா.ஜ.க மூத்த தலைவரை கைது செய்ததை கண்டித்து கேரளா முழுவதும் இந்துத்துவா அமைப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்

நிலக்கல் பகுதிக்கு சென்ற கேரள மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் சுரேந்திரனை போலீஸார் கைது செய்தனர். இதனால் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்தது.

இதற்கு ஆதரவு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கொச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்த போராட்டக்காரர்கள் கேரள மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதனிடையே சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான கழிவறை, ஓய்வறை, குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேரள அரசு செய்து கொடுக்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

 

 

Exit mobile version