தடையை மீறி சபரிமலைக்கு சென்ற கேரளா பா.ஜ.க. செயலாளர் கைது

சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற கேரள பா.ஜ.க. செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரளாவை சேர்ந்த பா.ஜ.க. செயலாளர் சுரேந்திரன் இருமுடி கட்டிக்கு கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்றுள்ளார். நிக்கல் பகுதி அருகே வந்தபோது, சுரேந்திர் மற்றும் அவருடன் வந்த சிலர் தடை மீறி கோயிலுக்கு செல்ல முயன்றனர். இதனைதொடர்ந்து, அவர்களை வழிமறித்த காவல்துறையினர், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், அதற்கு சுரேந்திரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மறுத்தனர். இதனையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Exit mobile version