கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து பாஜக விழிக்க தயாராக இல்லை : சிவசேனா

பாரதிய ஜனதா கட்சி, ஆட்சியை விட்டு செல்லும் பயணம் தொடங்கிவிட்டது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசு ஏமாற்றி விட்டதாகவும் சிவசேனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டுவோம் என்ற பாஜகவின் வாக்குறுதி வெற்று வாக்குறுதி என்றும், பாஜக ஆட்சியை விட்டு செல்லும் பயணம் தொடங்கி விட்டதாகவும் சிவசேனா விமர்சித்துள்ளது. தோல்வியில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை என்றும், கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து இன்னும் விழிக்க தயாராக இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Exit mobile version