தேர்தல் விதிமுறையை மீறியதால் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்

தேர்தல் விதிமுறையை மீறி நாளிதழுக்கு பேட்டியளித்தாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில தேர்தலுக்கு முந்தைய நாள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பேட்டி ஒன்று தனியார் பத்திரிகையில் வெளியானது. அதில், 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என பிரசுரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ள பா.ஜ.க., இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

அந்த புகார் மனுவில், வாக்காளர்களைக் கவர்வதற்காகவே நாளிதழில் பணம் கொடுத்து செய்தி வரவழைக்கப்பட்டதாகவும், இது தேர்தல் விதிமுறையை மீறி செயல் எனவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. எனவே விதிமுறை மீறிய ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version