தீயினால் வரையப்பட்ட ”கவிதை தீ” பாரதியாரின் ஓவியம்

பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை அண்ணாநகரில் ஓவியர் ஒருவர் தீயினால் பாரதியார் ஓவியத்தை வரைந்துள்ளார்.

அண்ணாநகரை சேர்ந்த ஓவியர் பாலாஜி, இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார். கட்டை ஒன்றில் துணியை சுற்றி, அதில் தீ மூட்டி, அதைக் கொண்டு, 5 நிமிடங்களுக்குள் அவர் பாரதியாரின் ஓவியத்தை வரைந்து அசத்தினார்.

தீயை போன்று தனது கவிதைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்திய பாரதியாரின் 140-வது பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில் இதனை வரைந்ததாக ஓவியர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Exit mobile version