மே.வங்கத்தில் முதியவருக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையில் நாயின் படம்

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் முதியவரின் வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்நகர் பகுதியை சேர்ந்த முதியவர் சுனில் கர்மாகர், தமது வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்துவதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அட்டை அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி காத்திருந்தது. சுனில் கர்மாகரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் நாயின் புகைப்படம் இருந்தது. இதனால் பெரும் அதிருப்தி அடைந்த அவர் மீண்டும் அதிகாரிகளிடம் வாக்காளர் அட்டையை ஒப்படைத்தார். பின்னர், நாயின் புகைப்படம் நீக்கப்பட்டு, சரியான புகைப்படம் இடம்பெற்ற வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Exit mobile version