மேற்கு வங்கத்தில் பிச்சை எடுத்த பெண் திரைப்படப் பாடகியானார்

மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த பெண் ஒருவர், வைரல் வீடியோவால் தற்போது பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமாக உள்ளார். இவரது மாற்றம் குறித்து இணையத்தில் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் ராணாகத் ரயில் நிலையத்தில் சினிமா பாடல்களைப் பாடி பிச்சை எடுத்து வந்தார் ராணு மோண்டால் என்ற பெண்மணி. இவரது குரல் பிரபல இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரின் குரலைப் போலவே இருந்தது. ஒருநாள் இவர் பாடுவதை ஒரு பயணி தற்செயலாக வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட அந்த வீடியோ வைரல் ஆனது. லதாமங்கேஷ்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் அந்தப் பாடகியின் குரலை வியந்தனர்.

இந்நிலையில் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன், அவருக்கு தான் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். அந்தப் பாடல் பதிவிற்காக ராணு மோண்டால் ஒரு நட்சத்திரப் பாடகி போல தயார் செய்யப்பட்டார். அந்தப் படங்கள்தான் தற்போது இணைய தளங்களில் சுற்றி வருகின்றன. இந்தப் புகைப்படங்களைப் பகிரும் பலரும் ராணு மோண்டாலுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version