2019-20ம் ஆண்டுக்கான கடற்கரை வாலிபால் போட்டிகள் துவங்கியது

நாகை புதிய கடற்கரையில், தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கடற்கரை வாலிபால் போட்டி இன்று துவங்கியது.

நாகை புதிய கடற்கரையில், இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தேசிய பள்ளிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் 65-வது கடற்கரை வாலிபால் போட்டி துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநர் வாசு துவக்கி வைத்த இந்த போட்டிகள், 3 நாட்கள் பகல், இரவு போட்டிகளாக நடைபெறுகிறது.

இந்த போட்டியில், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் மோதுகின்றன. 14, 17, 19 வயது என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெறும் இந்த போட்டியானது, 29ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளது.

Exit mobile version