முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டி

மதுரையில் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் அணியும் முதல் பரிசை தட்டி சென்றது.

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்டங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன. கூடைப்பந்து போட்டிக்கான இறுதிப்போட்டி மதுரையின் எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான முதல் பரிசை சென்னையைச் சேர்ந்த அணியும் பெண்களுக்கான முதல் பரிசை காஞ்சிபுரம் அணியும் தட்டிச் சென்றது. இவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கவுள்ளார்.

முதலமைச்சர் கைகளால் பரிசுத் தொகையை பெறப்போகும் அற்புத தருணத்திற்காக காத்திருப்பதாக இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தெரிவித்தனர். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Exit mobile version