தொடர்ந்து 7 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி 9ம் வகுப்பு மாணவி சாதனை

சென்னை அம்பத்தூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தொடர்ந்து 7 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி உலக சாதனைபடைத்துள்ளார்.அம்பத்தூரை சேர்ந்த 9 வகுப்பு மாணவி கிரண் அக்க்ஷயா, 7 ஆண்டுகளாக பரத நாட்டியம் பயின்று வருகிறார். இவர், பரத நாட்டியத்தில் புதிய உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 7 மணி நேரத்திற்கு மேல் தனி நபர் பிரிவில் பரத நாட்டியம் நடனம் ஆடினார்.

ஆயிரம் விளக்கில் உள்ள ராணி சீதை ஹாலில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியின் போது புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, சஜித்ஸ்வரம், சடாச்சரம், மீனாட்சி சப்தம், நவரச வர்ணம், விஷமக்கார கண்ணன், தில்லானா உள்ளிட்ட பல்வேறு தாளங்களிலும், ராகங்களுக்கு ஏற்பவும் அக்க்ஷயா நடனம் ஆடினார். தொடர்ந்து பல்வேறு பக்தி பாடல்களுக்கும், பாரதியார் பாடல்களுக்கும் அவர் நடனம் ஆடினார்.

Exit mobile version