நடுவானில் மாரடைப்பு..சென்னை வந்த வங்கதேச பயணி..என்னாச்சு?

புற்றுநோய்க்காக சிகிச்சை பெற வங்கதேசத்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தபோது, நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்தார். வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது அபு என்பவருடைய மனைவி குர்ஷிதா பேகம். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் வேலுர் மருத்துவமனையில் சிகிச்சை பெற தீர்மானித்து, விமானத்தில் தனது கணவருடன் புறப்பட்டு வந்தார். சென்னைக்கு அருகே, விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர், விமானத்திற்குள் ஏறி, அவரை பரிசோதித்தனர். ஆனால், குர்ஸிதா பேகம் தனது இருக்கையிலேயே உயிரிழந்திருந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
YouTube video player

Exit mobile version