நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் : ரயில் நிலையங்களில் பாதுகாப்பு உச்சம்

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பயணிகளின் உடமைகள் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களிலும், புறநகரங்களை இணைக்கும் மின்சார ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்கள், பார்க்கிங் பகுதி, நுழைவு வாயில்கள் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் நாடு முழுவதிலும் பல்வேறு ரயில்நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version