வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த விழிப்புணர்வு மாரத்தான்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மதுரையில் உள்ள இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து ஆரம்பித்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Exit mobile version