உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் பொன் விழாவையொட்டி, சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தென் பிராந்திய தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 3 ஆயிரத்து 129 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இந்த படைப்பிரிவு, தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் வீரர்களுடன் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அவர் துவக்கி வைத்தார்.துறைமுக வாயிலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி சிம்சன் பெரியார் சிலை வரை சென்றடைந்தது.

 

Exit mobile version