இளம்பெண் குளியலை வீடியோ எடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னையில் இளம்பெண் குளிப்பதை வீடியோப் படம் எடுத்த ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்த மகளிர் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை ஓட்டேரி பராக்கா சாலை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இவர், வீடு அருகே உள்ள ஒரு  இளம்பெண் குளிப்பதை, சுவர் மீது ஏறி நின்று வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் வினோத்குமாரின் செல்போனைப் பறிமுதல் செய்து அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் தேவிகா ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமாரைக் கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்ததில் 20 க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வினோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version