இந்திய அணியை அச்சுறுத்தும் ஆஸி. கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணியை அச்சுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக டிம் பெய்ன் கூறுகையில், கடந்த வருட கோடைக்காலத்தில் மட்டும் பாகிஸ்தான் (2 டெஸ்ட்) மற்றும் நியூசிலாந்து ( 3 டெஸ்ட்) அணிகளை ஒயிட்வாஷ் செய்துள்ளோம். தற்போது இரக்கமற்ற அணியாக விளையாடி வரும் நாங்கள், இந்திய டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வீரர்களை பெற்றுள்ளோம்.

நாங்கள், தொடர்ந்து இப்படியே ஆடும் பட்சத்தில், இந்தியா உடனான தொடர் அற்புதமாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால், இந்தியாவுக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணியை விட, முற்றிலும் மாறுப்பட்ட அணி தற்போது விளையாட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version