இந்தியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 283 ரன்களை எடுத்தது. கேப்டன் கோலி சதம் அடித்தார். டெஸ்ட் தொடரில் இது அவரது 25-வது சதமாகும்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 25 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அவர் சேர்ந்துள்ளார்.

43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, நிதானமாக விளையாடியது. அதன்படி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா, கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

Exit mobile version