மாமனார் கூட சண்டைன்னா கொலையா செய்வாங்க? மருமகனை சிறைபிடித்த ஊர்மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, குடும்பத் தகராறில் மாமனாரை கொலை செய்ய வந்த மருமகன் உள்ளிட்ட மூவரை, ஊர் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, காக்காதோப்பைச் சேர்ந்தவர் உமாபதி. இவரின் மகளை, சென்னை முகப்பேரைச் சேர்ந்த சத்தியநாராயணனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த மனைவி, சென்னையில் உள்ள சித்தி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சத்யநாராயணன், அவரது நண்பர்களான கலையரசன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன், காக்கா தோப்பில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று கதவை தட்டியுள்ளார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவர்களை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார், மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version