"அதிகாரிகளை தாக்குவது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும் "

சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்…

இதுகுறித்த அவரது அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாலைப் பணிகள் நடந்து கொண்டிருந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினரும், அவரது ஆதரவாளர்களும் எதற்கு சென்றனர்? என்றும் ஒப்பந்ததாரரிடம் என்ன பேரம் பேசப்பட்டது என்று யாருமே தெரிவிக்கவில்லை என்றும் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மாநகராட்சி அதிகாரியை தாக்கிய திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின் மீது மாறாத நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டுள்ளேன் என்று உறுதிமொழி எடுத்துள்ள சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகளை தாக்குவது, இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும் என்றும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version