பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிப்பு : இந்தியா அதிரடி

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் தாக்கி அழித்தன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2 ஆயிரம் ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலாகோட் ((Balakot)), முஷாஃபராபாத், சாக்கோதி ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. கடந்த 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய அரசு அரசியல், பொருளாதார ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாடு இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version