அகத்தியர் அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகளின் கூட்டம்

விடுமுறையையொட்டி நெல்லை பாபநாசம் அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசத்தில் அகத்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்று வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வது வழக்கம். அதனடிப்படையில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்ட இடத்தில் குளித்து மகிழ்ந்தனர்.

 

 

 

Exit mobile version