நேரு உள்விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடைபெறவுள்ள தடகள போட்டிகள்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில், 3 நாட்கள் நடைபெறும் 40வது தடகள போட்டி, நேற்று தொடங்கியது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகம் சார்பில் நடைபெறும் 40வது தடகள போட்டியை, அதன் நிர்வாக இயக்குனர் பாண்டே, நேற்று கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இதில் தடகள போட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், போன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியாவில் உள்ள எட்டு எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இறுதி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
 

Exit mobile version