கத்திரி பூ நிற பட்டாடையில் அருள்பாலிக்கிறார் அத்திவரதர்

காஞ்சிபுரம் தேவராஜபெருமாள் கோவிலில், அத்திவரதர் உற்சவம் தொடங்கியதன், 40 நாளான இன்று, அத்திவரதர் நீல வஸ்திரம் கத்திரி பூ நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், அத்திவரதருக்கு பஞ்சவர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை அணிவிக்கப்பட்டு, செண்பக பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் காலை 5 மணியளவிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விவிஐபி, விஐபி, டோனர் பாஸ் வைத்துள்ளவர்களுக்கென மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version