கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 13 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ஹானூர் அருகேயுள்ள சுல்வாடி கிச்சுகுட்டி மாரம்மா கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிகை 13 ஆக உயர்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பிரசாத மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,கோயில் விவகாரம் தொடர்பாக இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் அன்னதானத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

Exit mobile version