சமயம் வரும்போது தாக்குதல் நடக்கும்- அழகிரி அதிரடி

திண்டுக்கல்லில் மறைந்த திமுக தலைவர், கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கலந்துகொண்டு பேசினார். அப்போது , கருணாநிதியிடம் இருந்து சுயமரியாதை,உழைப்பை கற்றுக்கொண்டதாக கூறிய அவர், திருமங்கலம் தொகுதியில் நான் எவ்வாறு உழைத்தேன் என தொண்டர்களுக்கு தெரியும் என்றார்.

திமுகவில் இருந்து கருணாநிதி என்னை வெளியேற்றவில்லை என குறிப்பிட்டார். திமுக தொண்டர்களுக்காக பேசிய என்னை சதிகாரர்களே வெளியேற்றியதாக கூறினார். பதவிக்காகவே சிலர் ஸ்டாலினுடன் செல்வதை சுட்டிக்காட்டிய அவர், பதவிக்காக ஆசைப்பட்டவர்களே ஸ்டாலின் முகாமில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் வரும்போது எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும் என கூறிய அவர் ,திமுகவில் மாற்றம் கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

அழகிரியின் இந்த பேச்சு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Exit mobile version